Varuveere Yengal Yaa Nabiye


LYRICS


வருவீரே எங்கள் யா நபியே
தங்கள் வருகைக்கு தினமும் காத்திருந்தேன்
தருவீரே அண்ணல் மா நபியே
தங்கள் தரிசனம் யாசித்து பாடி நின்றேன்

தங்கிட வீடொன்று கட்டி வைத்தேன்
அதை தங்களுக்காகவே பதிவு செய்தேன்
உத்தமர் வாழ போவதனால்
அதன் உள்சென்று நானும் பார்த்தறியேன்

ஏழையின் வீடு எளியவன் கூடு
தாங்கள் வந்து விட்டாலோ அதற்கில்லை ஈடு

இருப்பதை அறிந்தால் பலர் வருவார்
தங்கள் உறக்கத்தை ஓய்வை கலைத்திடுவார்
ஆதலினால் பிறர் பார்வை படாதே ஒரு
ரகசிய இடத்தை கட்டி வைத்தேன்
அன்னை ஆமினா இல்லமும் அல்ல
அது ஹலிமா தாயின் வீடும் அல்ல
கண்மணி கதீஜா மாளிகையும் அல்ல
கற்பக ஆய்ஷா குடிலும் அல்ல

வஹீ வந்த ஹீரா குகையும் அல்ல
ஹிஜ்ரி வரலாற்று தவ்ரு குகையும் அல்ல
ஒட்டகம் அழைத்து ஒதுங்கி நின்ற
அபூஅய்யூப் அன்சாரி இல்லமும் அல்ல
ஆசையை வாசலாய் திறந்து வைத்தேன்
எந்தன் காற்றுக்கு சுவாசத்தை அனுப்பி வைத்தேன்
பக்தியின் பத்திகள் கொளுத்தி வைத்தேன்
விழும் கண்ணீரை பன்னீராய் தெளித்து வைத்தேன்

காஷ்மீர் ரோஜா சிகப்பழகு
மண்ணில் காதலர் விரும்பும் வடிவழகு
சுற்றி அளந்தால் கை அளவு
உள்ளே சுற்றியே பார்த்தால் உலகளவு
இதயம் என்றொரு பெயர் வைத்தேன்
அதை இரஸுலின் இல்லமாய் நான் வைத்தேன்
உள்ளமே இல்லமாய் மாறாதா
அதில் இரஸுலே குடி வரக்கூடாதா

=======================================
உள்ளம் என் இரஸுலின் இல்லம்

கவி ஆக்கம்: ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ