ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே!
அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே
கெதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
அண்ணலே உங்கள் உம்மத்தோர் என்னும் …
உரிமை கொண்டாடும் உவகையில் ஆழ்ந்தோம்
உத்தமரே உமது நெறி முறை கடந்தோம்
உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம் (2)
நில்லாது போவதை நிலையாக நினைத்தோம்
வல்லோனின் தூதரே வழி காட்டுவீரே
கெதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
திருந்தாமல் வாழ்வில் தீமைகள் செய்தோம்…
தீர்ப்பு சொல்லும் நாளை தேடாமல் மறந்தோம்
திரை நீங்கி உண்மை தெளிவாகும் அன்று
பரிந்துரை செய்து துணை கரம் நீட்டும் (2)
நீர் இல்லை என்றால் அங்கு நிலை என்ன வாகும்
நெறி வாழும் மதீனா பதி வாழும் நாதரே
கெதி யாரும் இல்லை நபி யா ரஸூலே
எண்ணத்தில் எல்லாம் தன்னலம் பார்த்தோம்
இன்பத்தை தீயோர் வழியினில் ரசித்தோம்
இதயத்தை வீனோர் கரத்தினில் சேர்த்தோம்
எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம் (2)
சொல்லாது போகும் சுகத்தினில் ஆழ்ந்தோம்
பொல்லாத பாவ தீயினில் வீழ்ந்தோம்
கெதி யாரும் இல்லை நபி யா ரஸூலே