மதீனா தைபா மா நகர் ஒளியில்
அண்டம் ஒளி கொண்டிலங்கினவே
மதியும் வானின் மீனினம் முழுதும்
நபி ஒளி கொண்டே துலங்கினவே
யா ரஸூலல்லாஹ் எமின் உயிரே!
எம் உயிரின் உயிரே கண்மணியே!!
அருளாம் உங்கள் பிறை நுதல் என்றும்
அழகாம் மகுடமாய் ஒளிர்ந்ததுவே
யா ரஸூலே நாம் உங்கள் அடிமை
நீங்களோ மன்னவர் மன்னவரே
பாரில் யாமும் பலன் பெறவே
எமை நூராம் ஒளியால் நிறைத்திடுவீர்
மகுடம் தரித்த மன்னவர் கூட
தங்கள் மதி முகம் கண்டதுமே
பணிந்தே தாழ்ந்தே புகழ்ந்து நிற்பரே
எங்கள் உயிரே யா நபியே
அருள் உங்கள் இதயம் ஒளி விளக்காகும்
அழகிய உடலே மணி மாடம்
தங்கள் சூரத்தின் எழில் உரைத்திடவே
சூரத்து நூரும் வந்ததுவோ
ஒளி தனக்குண்டோ நிழலது எங்கும்?
நிழலது இலையே ஒளி தனக்கே
ஒளியாம் தங்களின் பொன்னுடல்
தனக்கும் நிழலே இலையே யா நபியே
தொட்டிலில் தவழும் பாலகர் அஹ்மதர்
சுட்டிடும் தளிர் விரலசைவினுக்காய்
வானின் மதியும் ஆடியசைந்தே
மன்னவர் மனங்கொள விழைந்ததுவே
“காஃப் ஹாயா அய்னு ஸாதே”
ஒளியின் முகவெழில் விரிவுரையே
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
ரzஜா எனும் அஹ்மதின் புகழ்ப்பா உயர்ந்திட
ராஜர் அஹ்மதர் இன்னருளே
நாடும் எமை மன்றாடிக் காப்பீர்
நாளை மஹ்ஷரில் கண்மணியே