மானத்து முகி லாகக்கூடி
மணிகளாகத் தூவல் தூவி
முத்து எங்கள் முஹம்மதரின்
மாசிலா ஆசி....
மனையறம் வீச.......
மன்றினில் இணையும் ஜோடி
மாண்புடன் நீடு கூடி
ஏகனிறையின் அருளையேந்தி
வாகுடன் வாழி.....
வளமுடன் வாழி...
========
இல்லறத்து சிறகடித்து
நல்லறத்தின் வான் பறந்து
ஒன்றை ஒன்று பிரிந்திடாத
அன்றிலைப்போல
ஒன்றி வாழ்வீரே ......
வள்ளல் நபிகள் வழி நடந்து
வாஞ்சையுறவே சாலச் சிறந்து
நெஞ்ச மெங்கும் நீங்கிடாத
அன்புமேலோங்க
நேசம் கொள்வீரே.....
========
நல்ல குழந்தை பாக்கியமும்
செல்வ செழிப்பும் ஷோபனமும்
அல்லல் பிணிகள் எதுவுமின்றி
அன்பில் வாழ்வீரே
இன்பில் வாழ்வீரே
அண்ணல் நபிகள் ஆசியோங்க
ஆன்றலர் துஆ இலங்க
நல்ல ஒலிமார் பரிந்துரைக்க
நயந்து வாழ்வீரே .....
இயைந்து வாழ்வீரே ......
========
ஆடையாகி ஒருவருக் கொருவர்
கேடில்லாமல் மானம் காத்து
பாடும்வானம் பாடிபோல
கூடி வாழ்வீரே
குழைந்து வாழ்வீரே .....
வானம் கலந்த நீலம் போல
கானமிசைந்த தாளம் போல
தேன் கலந்த பாலும் பழமாய்
இன்று இணைந்தீரே
நன்று வாழ்வீரே ..........
கவி: கவிமகன் காதர்