மணம் வீசும் ஏகன் அருளே
மறை தந்த நாதரே
இறை தந்த தூதரே
கண்தேடுதே உம்மை கண்தேடுதே
அருள் ஆமினா தவப்பாலா
அன்னை கதீஜாவின் மணவாளா
ஜெகம் போற்றிடும் குணசீலா
ஜெயம் எமக்கு தந்தருள் செய்வீரா
பத்ர் யுத்தக் களத்தில் சென்று
படைகளை வென்றவர்
இறைவனை கண்டவர்
கண்தேடுதே உம்மை கண்தேடுதே
மறை போற்றிடும் மஹ்மூதா
மனங்களில் வாழும் குருநாதா
உமின் தரிசனம் கிடைக்காதா
உயர் அருள் ஆசிகள் தரும் நாதா
ஹரீசுன் அலைக்கும் என்று
திரு மறை போற்றுது
தினம் புகழ் சாற்றுது
கண்தேடுதே உம்மை கண்தேடுதே